ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.  
தமிழ்நாடு

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழா!

நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவிலில் நடைபெற்ற ஸ்ரீராமநவமி விழா பற்றி.

DIN

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஶ்ரீராமநவமி பெருவிழாவையொட்டி திருக்கொடி ஏற்றம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன், சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

திருக்கொடியேற்றத்தை வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் சொல்லியும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் செய்தும் நடத்தி வைத்தனர்.

கொடியேற்றத்தில் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களோடு அமர்ந்த இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நீ.கோபாலசுவாமி.

வரும் 16 ம் தேதி வரை நாள்தோறும் சுவாமி, தாயார் சன்னதிகளில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

ஶ்ரீராமநவமி பெருநாள் விழாவையொட்டி நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT