வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு 
தமிழ்நாடு

36 மணி நேரத்திற்கு முன்பே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் முன்னதாகவே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி பற்றி..

DIN

வங்கக்கடலில் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,

தெற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் இன்று அல்லது நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி(புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால், தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது எதிர்பார்த்ததை விட 36 மணி நேரத்திற்கு முன்னதாகவே உருவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக இன்று(ஏப்.8) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.7ல் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

SCROLL FOR NEXT