சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் தொடர்பாக...
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை(ஏப். 10) மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணைபடி இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை (ஏப். 10), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியில் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.
அதுபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நீட் விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு நாடகம் - விஜய்