சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
"ரயலசீமா/கர்நாடகத்தின் உள்புறப் பகுதிகளின் வடமேற்கிலிருந்து வரும் வறண்ட காற்று, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை(மேற்கு உள்புறம்), திருவள்ளூர் மாவட்டங்களை வந்தடையும். இதனால் இப்பகுதிகளில் அடுத்த 4 - 5 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமை(ஏப். 11, 12) மிகவும் வெப்பமாக இருக்கும்.
சென்னை மீனம்பாக்கம் இந்த ஆண்டில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸை பதிவு செய்யக் கூடும். வேலூரில் 41+ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.