பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு தொடர்பாக...
பேரவையில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை இன்று (ஏப்.17) காலை 9.30 மணிக்குக் கூடியது. அதன்பிறகு, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அவற்றுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதனிடையே, கேள்வி கேட்பவர்களை அமைச்சர் சேகர் பாபு ஒருமையில் பேசுவதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.