முகப்பு
தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவி திவ்யா தற்கொலை

Updated On : 5 ஆகஸ்ட், 2025 at 11:51 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி திவ்யா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

டி.பி. சத்திரம் பகுதியில் தங்கியிருந்து, கல்லூரிக்கு வந்து சென்றுகொண்டிருந்த மாணவி திவ்யா, அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

காவல்துறையினர் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உடல் கூராய்வுக்காக, திவ்யா உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.