முதல்வர் ஸ்டாலின்.  கோப்புப்படம்.
தமிழ்நாடு

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: முதல்வர் ஸ்டாலின்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழாவில் அவர் ஆற்றிய உரையில், இந்தச் சென்னை கம்பன் கழகத்தின் பொலிவுமிகு பொன்விழா நிறைவாக, அறிஞர்கள் பலரும் விருதுகள் பெற்றிருக்கிறார்கள்.

“நதிகள் பலவாக ஓடி வந்தாலும் அது வந்து சேருவது கடல்தான், அதுபோல், வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்” என்ற பொருளில் கம்பர் பல பாடல்கள் பாடியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டு இதே கம்பன் கழக விழாவில் உரையாற்றிய தலைவர் கலைஞர், “கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம் வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டார்.

“வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்” என்று கம்பர் சொன்னார். அப்படி வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது. இதுதான் கம்பர் கண்ட கனவு.

ஜார்க்கண்டில் மின்னல் பாய்ந்து ஏழு பேர் பலி

இத்தகைய மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதும் கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான் என்று இங்கு கூடியிருக்கும் இலக்கிய ஆளுமைகள் எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

விருதுகள் பெற்ற எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகளை மீண்டும் சொல்லி, கம்பன் கழக விழாக்களை மிகச்சிறப்பாக நடத்தி வரும் திராவிட ஆழ்வார் ஜெகத்ரட்சகனையும் மனதார பாராட்டி விடைபெறுகிறேன் என்றார்.

CM Stalin has said that Tamil Nadu is a state without poverty.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

SCROLL FOR NEXT