முதல்வரிடம் நலம் விசாரித்தார் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்... படம் | செய்தி மக்கள் தொடர்புத் துறை
தமிழ்நாடு

முதல்வர் மு. க. ஸ்டாலின் - மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு!

முதல்வரிடம் நலம் விசாரித்தார் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று(ஆக. 11) சந்தித்து சி. பி. ராதாகிருஷ்ணன் பேசினார். அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட சந்திப்பாக இது அமைந்திருப்பதாக முதல்வர் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 21-ஆம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் அங்கு மருத்துவர்கள் அறிவுரையின்பேரில் 3 நாள்கள் ஓய்வெடுத்த அவர் வீடு திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து, சென்னையில், இன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார்.

Chennai: Maharashtra Governor CP Radhakrishnan met Tamil Nadu Chief Minister MK Stalin at his camp office (residence) in Chennai and enquired about his health.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 368 மனுக்கள்

ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்

கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

SCROLL FOR NEXT