தொல். திருமாவளவன் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்து: காங்கிரஸைத் தொடர்ந்து விசிகவும் புறக்கணிப்பு!

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நடப்பாண்டு ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், “வழக்கம்போல சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

vck has announced that it will boycott the tea party hosted by Tamil Nadu Governor R.N. Ravi on the occasion of Independence Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT