சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்கள் கைது: உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

தூய்மைப் பணியாளர்கள் கைது குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தூய்மைப் பணியாளர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வியாழக்கிழமை முறையிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு அனைவரையும் வலுகட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பல்வேறு சமூதாய கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்கள் கைதை எதிர்த்தும் மாற்று இடம் ஒதுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

அப்போது, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களையும் சட்ட கல்லூரி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ”தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெற்று போராட எந்த தடையுமில்லை. அனுமதியோடு போராட்டம் நடத்தி காவல்துறை தடுத்தால் தலையிட முடியும். தூய்மைப் பணியாளர்கள் அனுமதி பெறவில்லை எனத் தெரிவித்ததால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், வழக்கறிஞர்கள் கைது குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

An appeal was filed before the Chief Justice of the High Court on Thursday against the arrest of a sanitation worker in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

SCROLL FOR NEXT