அமைச்சர் அன்பில் மகேஸ்  x/ anbil mahesh
தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பற்றி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சுதந்திர நாளையொட்டி சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே அவர்களுக்கு மன அழுத்தமாக மாறி விடக் கூடாது. அதனால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகள் மாணவர்கள் தேர்வு எழுதுவது மன அழுத்தத்தை உண்டாக்கும்.

எனினும் பிளஸ் 1 பாடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. பிளஸ் 1 பாடங்கள் பள்ளிகளில் முழுமையாக நடத்தப்படும்.

பிளஸ் 1 பாடங்களை நன்றாகப் படித்தாலே போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்.

தமிழகத்தில் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கல்வித் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டின் தலைவர்கள், தமிழ்நாட்டின் முக்கியத்துவம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக மாணவர்களின் கல்வி குறித்து ஆளுநர் பேசிய கருத்துகள் ஏற்புடையதல்ல" என்று பேசினார்.

Minister for School Education of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi explained on plus 1 public exam cancellation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

நயன்தாராவின் போலீஸ் அவதாரம்! டியர் ஸ்டூடன்ஸ் டீசர்!

SCROLL FOR NEXT