திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!
திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவெறும்பூர் தொகுதியில் மூன்றாவது முறையாக அன்பில் மகேஸ் இன்று (ஏப்ரல் 04) வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் மும்முரமாகத் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றோடு மூன்று நாள்களே உள்ள நிலையில், பலரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன்படி, மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளரும், கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
Advertisement
முன்னதாக, திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை அன்று வணிகர்களைச் சந்தித்து பிரசாரத்தைத் தொடங்கினார்.
அரியமங்கலம் பால்பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கத்துக்குச் சென்று அங்குள்ள தொழிலாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளையும், திருவெறும்பூர் தொகுதியில் நிறைவேற்றிய வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அன்பில் மகேஷ் திருவெறும்பூர் தொகுதியில் களம் காண்கிறார்.