FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக..

Updated On : 13 ஜூலை 2026, 1:21 pm IST
வேட்புமனு தாக்கல் - X
பகிர்:

மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக மூன்று பாஜக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மேற்கு வங்கத்தில் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்காக, சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பாரைக் ஆகிய மூன்று பாஜக வேட்பாளர்கள் திங்கள்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மூன்று தலைவர்களும் தங்கள் மனுக்களைச் சமர்ப்பித்தனர்.

Advertisement

Advertisement

சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பாரைக் ஆகியோர் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் விலகியதால் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியானது.

இதையடுத்து, ஒரு மாதத்திற்குப் பிறகு, இம்முறை பாஜக சார்பில் அவர்கள் மூவம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குச் செல்லத் தயாராக உள்ளனர். ஜூலை 9-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். இணைந்த சில மணி நேரங்களிலேயே மேற்கு வங்கத்திலிருந்து மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments