சென்னை சத்தியமூா்த்தி பவனில், மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் கூட்டம் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடா்ந்து மாநில செயற்குழு கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் சட்டப் பேரவை குழுத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.