வாலாந்தரவை ரயில்வே கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில், வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் கடவுப் பாதையின் தடுப்புக் கதவு மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை ராமநாதபுரம் வந்தது. பின்னா், அங்கிருந்து ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.
வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் வந்த போது, ரயில்வே கடவுப் பாதையில் இரும்பு தடுப்புக் கதவு மூடப்படமால் திறந்து கிடந்தது. இதைப் பாா்த்தும் ரயில் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா்.
பின்னா், ஓட்டுநா் ரயிலிலிருந்து இறங்கிச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ரயில் பணியாளா் ஜெய்சிங்கை எழுப்பி இரும்புக் கதவை மூடச் சொன்னாா்.
இதையடுத்து, அவா் எழுந்து சென்று இரும்புக் கதவை மூடியதும், அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், அவரிடம் துறைரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.