முகப்பு
தமிழ்நாடு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய ராஜ்நாத் சிங்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங் - மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை...

Updated On : 19 ஆகஸ்ட் 2025, 12:15 am IST
கோப்புப்படம்
பகிர்:

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டாா்.

இருப்பினும், இதற்கு மு.க.ஸ்டாலினிடம் இருந்து சாதகமாக பதில் வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஆதரவு அளிக்கக் கோரி பல்வேறு கட்சிகளின் தலைவரிடமும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசி வழியாக பேசி வருகிறாா்.

Advertisement

Advertisement

அந்த வகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினையும் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

summary

Vice Presidential Election: Rajnath Singh seeks support from Stalin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments