சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! x
தமிழ்நாடு

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு முதுகலை இதழியல் படிப்புக்கு விண்ணப்பங்களும் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த இதழியல் நிறுவனத்தில் 2025-2026-ம் கல்வியாண்டு முதல் இதழியல் துறையில் முதுநிலை பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையில் பாடத்திட்டம் உள்ளது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் வகையில் பாடத்திட்டமும் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister M.K. Stalin inaugurated the Tamil Nadu Government's Chennai Institute of Journalism in Kotturpuram, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!

குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன்: பகவந்த் மான்

ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான்

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

SCROLL FOR NEXT