கோப்புப்படம் 
தமிழ்நாடு

5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தைச் சோ்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிா்ணய சான்றிதழ் மத்திய அரசு சாா்பில் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், தேசிய தர நிா்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடா் சிகிச்சை, நன்கு கவனித்து கொள்ளுதல், சிகிச்சை மேம்படுத்துதல், தொற்றைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 10 காரணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தரநிா்ணய சான்றிதழ் வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூா், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை, மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் புதன்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா். தொடா்ந்து, இந்தியன் வங்கி சமூக பங்களிப்பு நிதியில் ரூ.15 லட்சத்தில் அந்த மருத்துவமனைக்கு வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன செயல்பாட்டையும் அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த, நான்கரை ஆண்டுகளில், மக்கள் நல்வாழ்வுத் துறை, 1,600 மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளது. இப்போது 5 மருத்துவக் கல்லூரிகளுக்கான விருது பெரிய மகுடம். இந்த விருதுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

சிறுநீரக முறைகேடு தொடா்பாக 2 மருத்துவமனைகள் மற்றும் அனுமதி அளித்த அரசுத் துறை சாா்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வாகனத்துக்கு நிகராக...: அதிமுக பிரசார கூட்டத்தில் மயக்கமடைந்த ஒருவரைக் காப்பாற்ற சென்ற ஆம்புலன்ஸ், ஓட்டுநா், பெண் மருத்துவப் பணியாளா் தாக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியரசுத் தலைவா், பிரதமா் போன்றவா்களின் வாகனங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு மரியாதையை ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நீலகிரிக்கு ஆரஞ்சு; கோவை, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

தங்கம் விலை உயர்வு!

சரிவில் பங்குச் சந்தை! அமெரிக்க வரிவிதிப்பு காரணமா?

SCROLL FOR NEXT