முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் டிச.3-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சாா்பில் மாநில விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவா்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆண்டுதோறும் இந்த நாளில் ஐக்கிய நாடுகள் சபை மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் ‘மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்‘ என அறிவித்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் ‘தமிழ்நாடு உரிமைகள் திட்டம்’ மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும்வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவா்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகா்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினா்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளைத் தீா்மானித்து முடிவெடுக்கும் அதிகாரமும் மாற்றுத்திறனாளிகளுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவா்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT