மழை EPS
தமிழ்நாடு

வட, தென் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

வட, தென் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...

தினமணி செய்திச் சேவை

வட, தென் தமிழகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச. 8 முதல் டிச. 12-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், அண்ணாமலை நகா் (கடலூா்), நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), முத்துப்பேட்டை (திருவாரூா்), நாகுடி (புதுக்கோட்டை), மாஞ்சோலை (திருநெல்வேலி) - தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் டிச.8 முதல் டிச.10-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்னையாக்குகிறது திமுக அரசு: செல்லூா் கே. ராஜூ

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

SCROLL FOR NEXT