தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  TNDIPR
தமிழ்நாடு

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கொளத்தூரில் நலத்திட்டங்களை தொடக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை கொளத்தூரில் அரசின் நலத்திட்டங்களை தொடக்கிவைக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் பெரி­யார் நகரில் வடசென்னை வளர்ச்­சித் திட்­டத்­தின் கீழ் சென்­னைப் பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மம் சார்­பில் அமைய உள்ள ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் அமு­தம் அங்காடி கட்டடப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

முன்னதாக கொளத்தூர் வந்த முதல்வருக்கு அப்பகுதி மக்களும், திமுக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

காரில் இருந்து இறங்கி மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோரை சந்தித்து உரையாடினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Chief Minister Stalin met the people in Kolathur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

SCROLL FOR NEXT