கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்துவது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பணி நிரந்தரம் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 3-ம் நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு செவிலியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அவர்களைக் கைது செய்து விடுவித்த நிலையில் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Nurses protest continues for the third day in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT