சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!
சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம் நடத்துவது பற்றி...
பணி நிரந்தரம் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 3-ம் நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு செவிலியர்கள் விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அவர்களைக் கைது செய்து விடுவித்த நிலையில் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
Nurses protest continues for the third day in Chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.