கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு டிசம்பர் 23, 34 ஆகிய தேதிகளில் 780 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதேபோன்று கோயம்பேட்டில் நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு இருந்து 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமையான டிசம்பர் 28ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாகவும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பயணிகள் தங்கள் கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.