சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றமில்லை!
சென்னை புறநகர் ரயில் சேவை நாளை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிப்பு...
ரயில் சேவை: சென்னை புறநகர் ரயில்கள் நாளை (டிச. 25) வழக்கம்போல் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளின் வருகை குறைந்து காணப்படும் என்பதால், சென்னையில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ஞாயிறு அட்டவணைப்படி குறைத்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனியார் அலுவலக ஊழியர்கள், பண்டிகை அன்று வெளியே செல்லும் பயணிகள் கோரிக்கையை ஏற்று, வார நாள் அட்டவணைப்படி வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
summary