தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப். 8) முதல் பிப். 13 வரை வட வானிலையே நிலவும். எனினும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், காலை நேரங்களில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 69 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.