முகப்பு
தமிழ்நாடு

காதலர் தினம்: ரோஜாப் பூக்களின் விலைகள் உயர்வு!

காதலர் தினம் என்பதால் ரோஜாப் பூக்களின் விலைகள் உயர்ந்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2025, 2:46 pm IST
காதலர் தினம் என்றாலே பூக்கள்தானே.. - Center-Center-Madurai
பகிர்:

காதலர் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

தனது காதலை சொல்பவர்களும், காதலை சொல்லிவிட்டு, பதிலுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்குமான பண்டிகையான காதலர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர்சந்தையில் ரோஜாப்பூகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

கொத்தாக ஒரே கட்டில் 20 ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து போன்ற தாஜ்மஹால் ரோஜா ரூ.500 வரையிலும் விற்பனையாகிறதாம்.

Advertisement

அதுபோல, பிங்க் ரோஜா, ஆரஞ்சு ரோஜா, மஞ்சள் ரோஜா உள்ளிட்ட வகைகள் முறையே ரூ.400, ரூ.350 போன்ற விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

மொத்தவிலையில் ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.25 ஆக இருந்து. இது சில்லறை விற்பனையில் ரூ.30க்கு விற்கப்படுகிறது.

பல பூச்சந்தைகளில் ஆயிரக்கணக்கான பூங்கொத்துகள் விற்பனையாகிவிருப்பதால், மலர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துளள்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.