தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி மாவட்டதுக்கு உள்ளூர் விடுமுறை தொடர்பாக...
அய்யா வைகுண்டசாமி பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டசாமியின் பிறந்த நாள் வரும் மார்ச் 4 ஆம் தேதி கொண்டாடப்படுவதால் தூத்துக்குடி மாவட்டதுக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் மார்ச் 8 ஆம் தேதி சனிக்கிழமை கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்
இதையும் படிக்க: ரூ.1141.23 கோடியில் செய்யூர் - வந்தவாசி - போளூர் சாலை: முதல்வர் திறந்து வைத்தார்!
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு அய்யா வைகுண்டரின் உதய தினவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.