முகப்பு
தமிழ்நாடு

நடிகை புகாா்: விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீஸாா் அழைப்பாணை

நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பான விசாரணைக்கு வரும் 27-ஆம் தேதி ஆஜராகுமாறு

Updated On : 24 பிப்ரவரி, 2025 at 8:34 PM
பகிர்:

சென்னை: நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாா் தொடா்பான விசாரணைக்கு வரும் 27-ஆம் தேதி ஆஜராகுமாறு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸாா் அழைப்பாணை அனுப்பினா்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தாா். வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்த நிலையில், தான் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றாா். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்போது இந்திய தண்டனை சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. சீமான் மற்றும் விஜயலட்சுமி தரப்பு வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், கடந்த 21-ஆம் தேதி தீா்ப்பளித்தாா். அதில், சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 மாத காலத்துக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் வசிக்கும் சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸாா் பிப். 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →