வடிவேலு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

200 தொகுதிகளில் திமுக வெல்லும்: பிரசாரத்தில் மீண்டும் வடிவேலு!

திமுகவுக்காக மீண்டும் பிரசாரக் கூட்டங்களில் வடிவேலு பங்கேற்று பேசியுள்ளார்.

DIN

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்க மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, நீண்ட நாள்களுக்கு பிறகு சென்னையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:

”யார்யார் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறார்களோ, அதனைக் கற்றுக் கொள்ளட்டும். யாரையும் காட்டாயப்படுத்த வேண்டாம். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மொழி தமிழ். 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் எழுதி வைத்துள்ளார்.

வலிமையான தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அவரின் வார்த்தைகள் மக்களை நெகிழ வைத்துள்ளது.

வருகின்ற 2026 தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திமுக - காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ பேட்டி

நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது

கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT