பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
வழக்கமாக மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 6 நாள்கள் முன்பே வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
ஜனவரி 10 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவரின் கணக்குகளிலும் ரூ. 1,000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.14 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 தமிழக அரசு வழங்கி வருகின்றது.
கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போதும் மகளிர் உரிமைத் தொகை முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.