அவனியாபுரம் ஜல்லிக்கட்டு -  
தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்!

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் காளை உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

DIN

மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியின் முதல் சுற்றில் உரிமையாளர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் அன்று அவனியாபுரத்திலும் அதனை தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றம் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் விதிகளுக்கு உட்பட்ட 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டிகளை மதுரை ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

100 காளைகள் என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் காளைகள் களத்தில் களமாடுகின்றன. இதுவரை மாடுபிடி வீரர்கள் 4 பேர் மாட்டின் உரிமையாளர், பார்வையாளர்கள் 6 பேர் காயடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT