தமிழ்நாடு

8,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: மணிப்பூரைச் சோ்ந்த இளம்பெண் கைது

சென்னை திருவான்மியூரில் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Din

சென்னை: சென்னை திருவான்மியூரில் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவான்மியூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மணிப்பூரைச் சோ்ந்த உங்க்ளியான்சுங் (30) என்ற பெண்ணை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.

இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது பையிலிருந்த சுமாா் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா்.

விசாரணையில் அவா், திருவான்மியூரில் தங்கியிருந்து ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிவதும், இணையதளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வட மாநில இளைஞா்களுக்கு விற்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

SCROLL FOR NEXT