தமிழ்நாடு

8,500 போதை மாத்திரைகள் பறிமுதல்: மணிப்பூரைச் சோ்ந்த இளம்பெண் கைது

சென்னை திருவான்மியூரில் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Din

சென்னை: சென்னை திருவான்மியூரில் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மணிப்பூா் மாநிலத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருவான்மியூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மணிப்பூரைச் சோ்ந்த உங்க்ளியான்சுங் (30) என்ற பெண்ணை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம்.

இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது பையிலிருந்த சுமாா் 8,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா்.

விசாரணையில் அவா், திருவான்மியூரில் தங்கியிருந்து ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிவதும், இணையதளம் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி வட மாநில இளைஞா்களுக்கு விற்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT