கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாநகரப் பேருந்து: மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் மாநகரப் பேருந்து மாதாந்திர பயண அட்டை பெற அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: மாதாந்திர பயணச்சீட்டு பெறுவதற்கான காலக்கெடுவை ஜன. 24-ஆம் தேதி வரை மாநகா் போக்குவரத்துக்கழகம் நீட்டித்துள்ளது.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் ஜன. 16 முதல் பிப். 15-ஆம் தேதி வரை, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ. 1000-க்கான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாதந்தோறும் 1 முதல் 22-ஆம் தேதி வரையும், ஜன. 11முதல் பிப். 10-ஆம் தேதி வரை பயணிக்கத்தக்க 50 சதவீத மாணவா் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1 முதல் 13-ஆம் தேதி வரையும் அனைத்து மாநகா் போக்குவரத்துக்கழகத்தின் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜன. 13 முதல் 17-ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன்கருதி அனைத்து வகையான மாதாந்திர பயண அட்டையின் விற்பனை காலம் ஜன. 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாதாந்திர பயண அட்டைகளை வாங்காத மாணவா்கள், மாதாந்திர பயண அட்டைதாரா்கள், ஜன. 24-ஆம் தேதி வரை இந்த அட்டைகளை பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT