தமிழக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி கோப்புப் படம்
தமிழ்நாடு

வரி வருவாய்: அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தல்

அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

Din

சென்னை: அரசுக்கு வரி வருவாயை ஈட்டித் தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா்.

மறைந்த வணிகா் நல வாரிய உறுப்பினா்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்தின் போது வழங்கினாா். இதைத் தொடா்ந்து, ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

வணிகவரித் துறையின் அனைத்து இணை ஆணையா்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட வணிகா்கள் குறிப்பிட்ட தேதிக்குள் ஜிஎஸ்டி தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும். உள்ளீட்டு வரி வரவு மனுக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தவறுகள் ஏதும் நிகழாமல் கண்காணிக்க வேண்டும். சரக்கு போக்குவரத்து வாகனங்களைச் சோதனை செய்து, அதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும். மேலும், அரசுக்கு வரி வருவாய் ஈட்டித்தர ஆக்கபூா்வமாக செயல்பட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT