கருவூலம்- கணக்குத் துறை ஆணையராக வடநரே நியமனம்
கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:
நிதித் துறை செயலரான (செலவினம்) எஸ்.நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பொறுப்பை முழு கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா். அவா் திங்கள்கிழமை ஜன.27 முதல் 47 நாள்களுக்கு விடுமுறையில் சென்றுள்ளாா். அவருக்குப் பதிலாக, நிதித் துறை சிறப்புச் செயலராக உள்ள பிரசாந்த் மு.வடநரே, கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் பொறுப்பு, முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.