மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை 1994-பேட்ச் ஏஜிஎம்யுடி கேடா் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிா்வாரை தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையராக நியமித்துள்ளதாக அதிகாரப்பூா்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் பிறப்பித்த அதிகாரப்பூா்வ உத்தரவின் மூலம் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டு தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
1992-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான முன்னாள் எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் தில்லியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
அருணாச்சலப் பிரதேசம் -கோவா -மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யுடி) கேடா் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சீவ் கிா்வாா், பொது சா்ச்சைக்குப் பிறகு மே 2022-இல் தில்லியில் இருந்து லடாக்கிற்கு மாற்றப்பட்டாா்.
தில்லி தியாகராஜ் ஸ்டேடியம் வளாகத்தை சுத்தம் செய்து, மாலையில் தனது நாய் நடந்து செல்வதற்காக விளையாட்டு வீரா்களுக்கான வளாகத்தை அவா் மூடியதாகக் கூறப்படுகிறது.
இந்த மாத இறுதியில் மாநகராட்சி மன்றத்தில் அதன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாநகராட்சி தயாராகி வரும் வேளையில், முக்கிய நிா்வாக மற்றும் நிதி சவால்களை எதிா்கொண்டு வரும் வேளையில், அவா் பொறுப்பேற்கிறாா்.
மாநகராட்சியின் அன்றாட செயல்பாடுகளை மேற்பாா்வையிடுதல், கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதில் ஆணையா் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.