முகப்பு
இந்தியா

6 ஆண்டுகளில் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல்: மத்திய உள்துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல்

Updated On : 11 பிப்ரவரி 2026, 4:27 pm IST
போதைப் பொருள் - ENS
பகிர்:

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 39 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2020 முதல் 2025 நவம்பர் வரையில், 38.89 லட்சம் கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020-ல் 5.88 லட்சம் கிலோ போதைப் பொருள்களும், அதிகபட்சமாக 2021-ல் 8.16 லட்சம் கிலோ, 2022-ல் 7.22 லட்சம் கிலோ, 2023-ல் 6.32 லட்சம் கிலோ, 2024-ல் 5.4 லட்சம் கிலோ என்று குறைந்த நிலையில், மீண்டும் 2025-ல் 5.89 லட்சம் கிலோவாக அதிகரித்தது.

Advertisement

Advertisement

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் ஒடிஸா முதலிடத்தில் உள்ளது. ஒடிஸாவில் மட்டும் 6 ஆண்டுகளில் 10.65 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 27 சதவிகிதத்துக்கும் அதிகம்.

மேலும், ராஜஸ்தானில் 2020-ல் 14,826 கிலோ பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2025-ல் 58,146 கிலோவாக உயர்ந்தது. மேற்கு வங்கத்திலும் 2020-ல் 25,979 கிலோ என்ற நிலையிலிருந்து, 2025-ல் 32,456 கிலோ என்ற அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் 2021-ல் 2.01 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து, 2025-ல் 44,182 கிலோவாக கணிசமாகக் குறைந்துள்ளது.

தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டவிரோத போதைப்பொருள் தடைச் சட்டத்தின்கீழ் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், நாடுகடந்த போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க, அண்டை நாடுகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடனான சர்வதேச ஒத்துழைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

summary

39 lakh kg cannabis based drugs seized across India since 2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.