FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி 2025, 12:41 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழகம் மற்றும் புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.1,2) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (பிப்.1,2) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதைத்தொடா்ந்து, பிப்.3 முதல் பிப்.6 வரை தமிழகத்தில் வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.1-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments