தூத்துக்குடி அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை 
தமிழ்நாடு

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞர், சேலம் காவல்நிலையம் அருகே கொலை செய்யப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் நிபந்தனை ஜாமீன் மூலம் வெளியே வந்தார்.

உள்ளூர் பகுதிகளில் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் எனக் கருதிய நீதிமன்றம் வெளியூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த பத்தாம் தேதி முதல் மதன்குமார் காலை - மாலை என இரு வேளைகளும் கையெழுத்துப் போட வந்து சென்று உள்ளார்.

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கையெழுத்துப் போட வந்த மதன்குமார், சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது சேலம் மணக்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த செல்லும் பொழுது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரொம்ப பார்க்காதீங்க... பூனம் பாண்டே!

புது டிரெண்ட்... வைஷ்ணவி!

கொஞ்சம் ஹைட் அன்ட் ஸீக், கேமராவுக்கு... தமன்னா!

லயோலா கல்லூரி, சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி!

நன்றி என்பது உள்ளொளி... சீரத் கபூர்!

SCROLL FOR NEXT