ஆடி வெள்ளி 
தமிழ்நாடு

ஆடி வெள்ளி! பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!

ஆடி வெள்ளி என்பதால், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

இணையதளச் செய்திப் பிரிவு

தஞ்சை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு முக்கிய சக்தி தலமாக விளங்கும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள துர்கை அம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேணுபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தேவாரப் பதிகம் பெற்ற முக்கிய சக்தி தலமாகவும் விளங்குவதுடன் சோழர்களின் காவல் தெய்வமாகவும் விளங்கியது.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்தில் அதிகாலை நான்கு மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று துர்க்கை அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

மேலும் உற்சவர் துர்கை அம்மன் சன்னதியில் ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT