கனமழை எதிரொலி: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!
கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்...
நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உதகையில் உள்ள அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8-வது மைல் டீ பார்க், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா மையங்கள் இன்று(சனிக்கிழமை) ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Forest department has announced closure of some tourist spots in ooty due to heavy rain warning for Nilgiris.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.