சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
தமிழ்நாடு

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!

மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு..

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தாக்கல் செய்திருக்கும் மனுவை நீதிபதி நிர்மல் குமார் விசாரிக்கவுள்ளார்.

கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.

மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A petition has been filed in the Madras High Court on behalf of the police seeking cancellation of the anticipatory bail granted to Madurai Atheenam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேஜரிவால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

நவோனியா திருட்டுக் கும்பலின் உத்தி என்ன? செல்போன் திருட்டில் கைதேர்ந்தவர்கள்!!

தமிழக டிஜிபி நியமனம் விவகாரத்தை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சிறையிலிருந்து வந்து வாக்களித்த எம்பி ரஷீத்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

SCROLL FOR NEXT