ரயில் கோப்புப் படம்
தமிழ்நாடு

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிறுத்தம்: கச்சேகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலும்(எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ஆம் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.

கூடுதல் பெட்டி: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 12027/12028) இருமாா்க்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஒரு குளிா்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT