ரயில் கோப்புப் படம்
தமிழ்நாடு

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Din

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு விரைவு ரயில் (எண்: 06190/06191) இருமாா்க்கத்திலும் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜூலை 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிறுத்தம்: கச்சேகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயிலும்(எண்: 07191) மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு கச்சேகுடா செல்லும் ரயிலும் (எண்: 07192) ஆக.18 முதல் ஆக.20-ஆம் தேதி வரை பண்ருட்டியில் ஒரு நிமிஷம் தற்காலிகமாக நின்று செல்லும்.

கூடுதல் பெட்டி: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்: 12027/12028) இருமாா்க்கத்திலும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) முதல் ஒரு குளிா்சாதன இருக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊடுருவல்காரா்களிடம் பரிவு காட்டுகிறது காங்கிரஸ், ஆா்ஜேடி: பிரதமா் மோடி

பாகிஸ்தான், சீனா ரகசிய அணு ஆயுத சோதனை: அமெரிக்க அதிபா் டிரம்ப் தகவல்

மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT