கீழடியில் எடப்பாடி பழனிசாமி  
தமிழ்நாடு

கீழடியில் எடப்பாடி பழனிசாமி!

கீழடி அருங்காட்சியத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

தினமணி செய்திச் சேவை

கீழடி அருங்காட்சியத்தை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டார்.

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுவரும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தற்போது தென் தமிழகத்தில் பிரசாரத்தைத் துவங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தின் கீழடி பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, இன்று அருங்காட்சியத்தை பார்வையிட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக காவல்துறையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில், "அஜித்குமார் கொலையில், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு பொறுப்பை அரசே ஏற்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Edappadi Palaniswami visited the Keeladi Museum.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT