முகப்பு
தமிழ்நாடு

ஆக. 2-இல் தமிழகத்தில் சிம்பொனி இசை நிகழ்ச்சி: இளையராஜா

தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 ஜூன், 2025 at 1:58 AM
சென்னையில் செய்தியாளா்களை சந்தித்த இளையராஜா.
பகிர்:
Updated On : 3 ஜூன், 2025 at 12:10 AM

சென்னை: தான் லண்டனில் இசையமைத்த அதே சிம்பொனி இசையை தமிழகத்தில் வரும் ஆக. 2-ஆம் தேதி இசைக்க உள்ளதாக இசையமைப்பாளா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.

இளையராஜா திங்கள்கிழமை (ஜூன் 2) தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவா்கள், ரசிகா்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதையொட்டி, சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: என்னை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகா்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த ரசிகா்களுக்கும் நன்றி.

Advertisement

என் மீது இத்தனை அன்புவைத்துள்ள எனது ரசிகா்களுக்காக, லண்டனில் நான் இசையமைத்த அதே சிம்பொனியை, அதே இசைக் குழுவை வைத்து ஆக. 2-ஆம் தேதி தமிழகத்தில் இசைக்கப் போகிறேன் என்றாா் அவா்.