கார் விபத்து 
தமிழ்நாடு

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

3 பேர் படுகாயங்களுடன் மீட்பு...

DIN

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் நான்கு வழிச் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் தடுப்புச் சுவரில் மோதி உருக்குலைந்தது.

இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயஙக்ளுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த கார் சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புன்னகைப் பூவே... ரெஜினா!

காந்தி பிறந்த நாள்! முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு!

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை! | Gandhi jayanti

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

SCROLL FOR NEXT