தமிழ்நாடு

பெரியார் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி இன்று காலை அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மெரீனாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

'ஹிந்தித் திணிப்பை எதிர்ப்போம், அண்ணா வழியில் பயணிப்போம்' என்று அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்ற முதல்வர், பெரியாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

SCROLL FOR NEXT