எடப்பாடி பழனிசாமி  கோப்புப்படம்.
தமிழ்நாடு

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவது தொடர்பாக இபிஎஸ்.

DIN

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “கூட்டணி பற்றிய பேச்செல்லாம் விட்டுவிடுங்கள், தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்காதீர்கள், நாங்கள் எதாவது கூறினோமோ! யார் யார் சொல்வதெல்லாம் எங்களிடம் கேட்காதீர்கள். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?” என்றார்.

இதனைத் தொடர்ந்து பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துப் பேசிய இபிஎஸ், “அதிமுக, திமுகவை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளது. எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது.

திமுகவை வீழ்த்துவதே எங்களின் குறிக்கோள். கூட்டணி குறித்து 6 மாதங்கள் கழித்து தெரிவிக்கப்படும். ” என்றார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்குவது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் பதில் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதையும் படிக்க | சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT