முகப்பு
தமிழ்நாடு

கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

மேட்டுபாளையம் - உதகை இடையே கோடைகால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 6 மார்ச், 2025 at 10:23 AM
உதகை சிறப்பு மலை ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வரை ஆர்வம் காட்டுவதால், இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்துவிடும்.

வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தரவிருப்பதால், சிறப்பு மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

ஏற்கெனவே, நாளைதோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கும், பகல் 2 மணிக்கு உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

இதுதவிர, மார்ச் 28 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு வாரத்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கும், உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.