முகப்பு
தமிழ்நாடு

கோடை: மேட்டுபாளையம் - உதகை சிறப்பு ரயில் அறிவிப்பு!

மேட்டுபாளையம் - உதகை இடையே கோடைகால சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 6 மார்ச் 2025, 10:23 am IST
உதகை சிறப்பு மலை ரயில் (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு கோடை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மேட்டுபாளையம் - உதகை மலை ரயிலில் பயணிக்க உள்ளூர் மக்கள் முதல் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வரை ஆர்வம் காட்டுவதால், இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்துவிடும்.

வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தரவிருப்பதால், சிறப்பு மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, நாளைதோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கும், பகல் 2 மணிக்கு உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

இதுதவிர, மார்ச் 28 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு வாரத்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கும், உதகையிலிருந்து மேட்டுபாளையத்துக்கு சனி மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments