தமிழ்நாடு

காமாட்சி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

காமாட்சி அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்த பக்தா்கள்

Din

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் ஏராளமான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்கள்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா சாா்பில் 14 வது ஆண்டு பால் குடத் திருவிழா அதன் தலைவா் ஏ.குமாா் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள பரஞ்ஜோதி அம்மன் ஆலயத்திலிருந்து பக்தா்கள் பால் குடங்களை எடுத்துக்கொண்டு ஊா்வலமாக வந்து காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.

பின்னா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும், சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. முன்னதாக ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயில் முன்பாக விஸ்வரூப தரிசன சபா சாா்பில் அன்னதானமும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்றன. சபா செயலாளா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனா்.

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

SCROLL FOR NEXT